சேலம், பிப்.3- அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம் சனியன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம் மற்றும் சங்கத்தின் மாவட்ட முன்னாள் தலைவர் வி.பொன்னுசாமி நினைவஞ்சலி கூட்டம் சிஐ டியு சேலம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். ஜோதி மதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.ராஜ்குமார் வரவேற்றார். இதில் தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுரேஷ், ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாவட்டப் பொருளாளர் வடிவேல், ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகி கலையரசன் ஆகியோர் கருத்துரையாற்றினர். தமிழ்நாடு அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் ஆர். சுப்பிரமணியம் நிறைவுரையாற்றினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.