districts

img

மாற்றுத்திறனாளி மாணவியின் பென்சில் ஓவியம்

மேட்டுப்பாளையம், மார்ச் 14- மாற்றுத்திறனாளி மாணவியின் பென்சில்  ஓவியம் அனைவரையும் ஆச்சரி யத்தில் ஆழ்த்தியுள்ளது.  கோவை மாவட்டம்,  மேட்டுப்பாளை யத்தை சேர்ந்த  அப்துல்லா அனீஸ் மற்றும்  பாத்திமா தம்பதியருக்கு இரண்டு மகள்கள்  மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள்  உள்ளனர். இதில் மூத்த மகள் அப்ரா சாலிகா  பிறவியிலேயே காது மற்றும் வாய் பேச  முடியாத மாற்றுத்திறனாளி. இதனை ஒரு  குறையாகவே பொருட்படுத்தாத அப்ரா  சாலிகாவின் பெற்றோர் தங்கள் மகளுக்கு எதில் ஆர்வமோ அதனை ஊக்குவித்து அன்பு  பாராட்டி வளர்த்தனர்.கேட்பதும் பேசுவது  என  ஓசைகள் மட்டுமே ஒருவரை சாதிக்க  வைக்க இயலும் என்பதை மாற்றி கண் களால் காண்பதை ஓவியங்களாக வரைந்து  அதற்கு உயிரூட்டி அசர வைக்கிறார்.  புகைப்படத்தை அவரது செல்போனுக்கு  அனுப்பினால் போதும் அதனை சில  நிமிடங்களில் காகிதத்தில் நகல் எடுத்தது  போல் ஓவியமாக வரைந்து காண்போரை  அசர வைத்து  விடுகிறார். இதுகுறித்து அவரது பெற்றோர்கள் கூறுகையில், சிறு வயதிலிருந்து ஓவியம் வரைவதில் மிகவும் ஆர்வம் காட்டி வந்த அப்ரா சாலிகா மிகவும் தத்ரூபமாக ஓவியம்  வரைந்து வருகிறார். இவரது முயற்சிகளுக்கு  எங்களால் இயன்ற வரை ஊக்குவித்து வரு கிறோம் என்றனர். அப்ரா சாலிகா  சைகை மொழியில் தனது  கோரிக்கையினை கூறுகையில், தனக்கு  மிகவும் உறுதுணையாக தனது பெற் றோர்கள் இருந்து வருவதாகவும், தன்னு டைய சொந்த ஊரை, தொழிலை விட்டு விட்டு தனக்காக மேட்டுப்பாளையம் வந்து அனைத்து விதமான உதவிகளையும் தனது பெற்றோர்கள் செய்து வருவதாகவும், பிற  மொழிகளை போல் சைகை மொழி யினையும் ஒரு தனி மொழியாக அரசு அறி விக்க வேண்டும். என்னை போன்றவர் களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கி ஊக்குவித்து உதவிட வேண்டும், என்றார்.