districts

அடகு கடையில் நூதன முறையில் திருட்டு: 3 பேர் கைது

திருப்பூர், ஜன.3- நகை அடமானம் வைக்க யாரும் வராமல், போலியான பெயர்களை உருவாக்கி நூதன முறையில் லட் சக்கணக்கில்  மோசடி செய்த  கடை  ஊழியர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.  திருப்பூர், கரட்டாங்காடு பகுதி யில் சுரேஷ் பாண்டி என்பவர் எட்டு வருடங்களாக நகை அடகு கடை  நடத்தி வருகிறார். இவரிடம் எட்டு  வரு டங்களாக சிவகங்கையச் சேர்ந்த அருண் என்பவர் வேலை பார்த்து வரு கிறார். நகை அடகு கடையில் அடகு வைப்பதற்காக வரும் பொது மக்க ளிடம் நகைகளை அடமானமாக பெற்று அதற்கு பணம் வழங்கி அத்து டன் ரசீதும் வழங்கி வந்துள்ளார். இந்த நிலையில் அடகு வைப்பதற்கு  நகைகளை கடையில் வாங்காம லேயே போலியாக நகைகள் அடகு பெற்றதாக ரசீது வழங்கி லட்சக்க ணக்கில் நூதன முறையில் மோசடி யில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு உறு துணையாக அவரது நண்பர்கள் சக்தி வேல், பிரதீப் ஆகியோர் உடனிருந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.   இந்நிலையில், அடகு கடையில்  அதன் உரிமையாளர் சுரேஷ் பாண்டி திடீர் என கணக்கு வழக்குகளை சரி பார்த்தபோது கடையில் நகைகள் இல் லாமல் ரசீது மட்டும்  இருந்துள்ளது.  இதை அடுத்து சந்தேகம் அடைந்த  சுரேஷ் பாண்டி திருப்பூர் தெற்கு  காவல் நிலையத்தில் புகார் அளித் தார். புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் போலியாக ரசிது போட்டு பணத்தை மட்டும் எடுத்து வந் துள்ளதை உறுதி செய்தனர். மேலும், விசாரணையில், மாதம் ஒருமுறை உரிமையாளர் சுரேஷ் பாண்டி கடை யில் ஆடிட்டிங் செய்ய வரும் போது  காங்கேயம் சாலையில் உள்ள மற் றொரு கிளையில் இருந்து போலி ரசீ துக்கு தகுந்த வாரு நகைகளை எடை கணக்கில் எடுத்து வந்து கணக்கு  காட்டி வந்துள்ளனர். தொடர்ந்து சுரேஷ்  பாண்டி காங்கேயம் சாலை கடைக்கு  செல்லும் போது இவர் செல்வதற்கு முன் எடுத்து வந்த நகைகளை மீண் டும் இங்கு கொண்டு வந்து இந்த  கடைக்கு கணக்கு காட்டி உள்ளனர்.  இதை தொடர்ந்து கணக்கு சரியாக உள்ளது என உரிமையாளர் சுரேஷ்  பாண்டி சென்றுள்ளது தெரியவந் துள்ளது.  இதனையடுத்து, மோசடியில் ஈடு பட்ட அருண், பிரதீப் அவரது நண்பர் சக்திவேல் ஆகியோர் மூன்று பேரை யும் திருப்பூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர், அவர்க ளிடம் இருந்து 24 லட்சம் ரூபாய்  மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டுள் ளது. இந்த மோசடி தொடர்பாக போலீ சார் மேலும் சிலரை தேடி வருகின் றனர்.