districts

img

மடத்துக்குளம் பேருந்து நிலையத்தில் தனியார் வாகன ஆக்கிரப்புகளால் பயணிகள் அவதி

திருப்பூர், மார்ச் 16 -  மடத்துக்குளம் தாலுக்கா பேருந்து நிலையத்தின் உள்ளே, தனி யார் வாகனங்களின் நிறுத்தமாக இருப்பதால் பயணிகள் கடும் அவ திக்குள்ளாவதாகவும், இதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பொள்ளாச்சி – திண்டுக்கல் தேசிய நெடுச்சாலையின் மடத்துக்கு ளம் பேருந்து நிலையம் அமைந்துள் ளது. இந்த பேருந்து நிலையத்தில் உடுமலை, பழனி, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு தினமும்  நூற்றக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.  இந்த நிலையில் வெளி மாவட்டங் களுக்கு செல்லும் பேருந்துகள் பல  ஆண்டு காலம் பேருந்து நிலையத் திற்குள்ளே வராமல் தேசிய நெடுச்சா லையில் மட்டுமே நின்று செல்வதால்  பயணிகள் பேருந்தைப் பிடிக்க கடும்  அவதிப்படுகிறார்கள் என்று பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து தற்பொழுது அனைத்து வெளி மாவட்ட பேருந் துகளும் உள்ளே வந்து செல்கின் றன.ஆனால் தனியார் வாகனங் களை எவ்வித அனுமதியும் இல்லா மல் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்து கொள்வதுடன், சில தனியார்  நிறுவன வாகனங்கள் விதிமுறையை  மீறி பேருந்து நிலையத்தின் உள்ளே  வந்து தங்கள் நிறுவனங்களுக்கு வேலைக்கு வரும் ஆட்களை ஏற்றி யும் இறக்கி விட்டு செல்கிறார்கள்.  இதனால் பேருந்துகள் உள்ளே யும், வெளியேயும் வந்து செல்ல முடி யாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்ப டுகிறது. மேலும் எந்த பேருந்து எங்கு  நின்று செல்கிறது

என்ற குழப்பத்தை  பயணிகளுக்கு ஏற்படுத்தும் வித மாக இந்த தனியார் வாகனங்களின் ஆக்கிரப்புகள் உள்ளன. இது குறித்து பயணிகள் தெரி விக்கையில், பல ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுது தான் சர்வீஸ்  வண்டிகள் பேருந்து நிலையத்தின் உள்ளே வருகிறது. மேலும், கிராமங்க ளுக்கு செல்லும் பேருந்துகள் எங்கு  நின்று செல்கிறது என்று தெரியாமல்  இருக்கும் வகையில் தனியார் கார்  மற்றும் வேன்கள் பேருந்து நிலை யம் முழுமைக்கும் ஆக்கிரமித்து நின் றிருப்பதால், முழுமையாக பேருந்து  நிலையம் தனியார் வாகன நிறுத்தும்  இடமாக உள்ளது. நாங்கள் பேருந் துகளின் ஏற முடியாமல் பெரிய அவ திக்கு உள்ளாகிறோம். மற்றும் இந்த பேருந்து நிலைய வழியில் தான் ரயில் நிலையம் செல்ல வேண்டும் அங்கு செல்வதற்கும் தனியார் வாகனங்கள் ஆக்கிரப்புகளை தாண்டித்தான் செல்ல வேண்டும். பேருந்து நிலையத்தில் சுகாதாரம் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை எந்த கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலையில் தண்ணீர் வருவது இல்லை. எந்த கழிவறைக்கும் கதவுகள் இல்லை. மற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கழி வறை கட்டிய நாள் முதல் இன்று வரை பயன்படுத்த முடியாத நிலை யில் தான் உள்ளது என்றார்கள். தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பயன்படுத்தும் மடத் துக்குளம் தாலூக்க பேருந்து நிலை யத்தை முறையாக பராமரித்து தனி யார் வாகனங்களின் ஆக்கிரப்பு களை அகற்ற வேண்டும் என்று  பயணிகளின் கோரிக்கை வைத்துள் ளனர்.