districts

img

அமைதிக்குழு அமைக்க கட்சிகள் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 7– திருப்பூர் மாநகரில் சமூக அமைதி தொழில் வளர்ச்சியை சீர்குலைக்க தீய சக்தி கள் முயற்சி மேற்கொண்டுள்ளன. எனவே மாநகரில் அமைதியைப் பாதுகாக்க அனைத்து அமைப்புகள் கொண்ட அமைதிக் குழு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்துக்  கட்சிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், மாநகரச் செயலாளர்கள் டி.ஜெயபால்,  பி.ஆர்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ரவி, மாந கர் மாவட்டச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன்,

 புறநகர் மாவட்டச் செயலாளர் கே.எம்.இசாக்,   காங்கிரஸ் நிர்வாகி கோபால்சாமி, இந்தியன்  யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி முஸ்தபா, தந்தைபெரியார் திராவிடர் கழகம் சார்பில்  சண்.முத்துகுமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் தம்பி வெங்கடாசலம், ஆதித்தமிழர் பேரவை தளபதி மாறன், சோழன், திராவிடர் கழகம் சார்பில் மா.கரு ணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். திருப்பூரில் செயல்பட்டு வரும் பனியன் தொழில், ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. தற் போது பஞ்சு, நூல் விலை உயர்வால் கடும்  நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டுள் ளது.  இதனால் உழைக்கும் மக்களும், உற்பத் தியாளர்களும், பொதுமக்களும் இணைந்து  நின்று பனியன் தொழிலைப் பாதுகாப்பதற் கான முறையில் கடையடைப்பு, முழு வேலை  நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி னர்.

திருப்பூரில் பனியன் தொழில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியபோதிலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் அமைதியான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில்,  பொது மக்களின் கவனத்தைத் திசைதிருப் பும் உள்நோக்கத்துடன் சில தீய சக்திகள் களம் இறங்கியுள்ளன. குறிப்பாக இஸ்லாமி யர்களின் வழிபாடு நடத்தும் இடம் சம்பந்த மான பிரச்சனையை முன் வைத்து ஒரு கலவ ரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.     குறிப்பாக திருப்பூர் தெற்கு  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முதலமைச் சருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கருத்துக்காக அவர் மீது களங்கம் கற்பிக்கும்  விதத்தில் அறிக்கை விடுவதும், அவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு நிர்வாகத்திடமும், காவல் துறையிடமும் புகார் மனு கொடுப்பதும் அவரது வீட்டை  முற்றுகையிடுகிறோம் என மிரட்டுவதும் என  பல வகையான நடவடிக்கைகளில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, முதல்வர் இது குறித்து ஆழ மாக பரிசீலித்து தீய நோக்கம் கொண்ட  சக்திகளை இனங்கண்டு உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும்.  திருப்பூரில் சமூக நல்லி ணக்கம், தொழில் அமைதி நிலவ முதல்வர் ஆவன செய்ய வேண்டும்.     முதல்வரின் சீரிய முயற்சிக்கு திருப்பூர்  மாநகரில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளும்,  சக்திகளும் உறுதுணையாக நிற்கும். திருப் பூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெடா மல் பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகளைக் கொண்ட அமைதிக்குழுவை அமைத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி கள் சார்பில் கேட்டுக் கொள்வதாகவும் கூறப் பட்டுள்ளது.