districts

img

பல்லடம்: ஏழு போலீசாருக்கு கொரோனா

திருப்பூர், ஜன.17- திருப்பூர் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில்  பல்லடம் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலை யத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு ஆகிய இரு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இதில் 2  காவல் ஆய்வா ளர்கள், 9 உதவி ஆய்வாளர்கள், 63 காவ லர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலை யில் இங்கு பணியாற்றும் காவலர்களுக்கு அண்மையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏழு காவலர்க ளுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப் பட்டது.  இதையடுத்து தொற் றால் பாதிக்கப்பட்ட காவ லர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள் ளனர். மேலும், காவல் நிலை யத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, நோய் பர வலை தடுக்கும் நடவடிக்கையில் பல்லடம் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. மேலும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட காவலர்களுடன் தொடர்பில் இருந்த சக கா வலர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட் படுத்தி கொண்டனர்.