அவிநாசி, ஜன.18- அவிநாசியில் உள்ள மைய தடுப்புகளில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வர்ணம் பூசம் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். நெடுஞ்சாலைத் துறை மூலமாக, அவிநாசி புதிய பேருந்து நிலையம் முதல், ஆட்டையாம்பாளையம் பகுதி வரை மைய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் கட்சிகள், ரசிகர் மன்றங்கள் என பல அமைப்பினர் சுவரொட்டிகள் ஒட்டி செல்கின்றனர். இரவு நேரங்களில் இதன் விலைவாக வாகனங் கள் மைய தடுப்புகளில் மோதி விபத்துக்கு உள்ளாகிறது. இதனை தடுக்க நெடுஞ்சாலைத் துறையினர் மைய தடுப்புக ளில் வெள்ளை ,கருப்பு நிறங்களில் வர்ணம் பூசி, சுவரொட்டி கள் ஒட்ட வேண்டாம் என்ற வாசகங்கள் எழுதும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சமூக அலுவலர்கள் கூறுகையில், ஆட்டை யம்பாளையம் பகுதியில் வர்ணம் அடித்து 20 நாட்களே ஆகிய நிலையில் மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனை தடுக்க, சுவரொட்டிகள் ஒட்டும் நபர்கள் மீது நெடுஞ் சாலைத் துறையினர் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.