districts

img

அரசு போக்குவரத்தில் அவுட்டோர்சிங்: போக்குவரத்து சங்கம் கண்டனம்

சேலம், மே 12- தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழி யர் சங்க சேலம் கோட்ட சிறப்பு மாநாடு ஐந்து ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில், அரசு போக்குவரத்துக் கழகங்க ளில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சிஐடியு சேலம் கோட்ட சிறப்பு மாநாடு சங்கத்தின் கோட்ட தலை வர் கே.செம்பன் தலைமையில் நடை பெற்றது. முன்னதாக, தருமபுரி பொதுச் செயலாளர் முரளி வரவேற்றார். இதில், மாநில துணை பொதுச்செயலாளர் எம். கனகராஜ், ஜான்சன் கென்னடி ஆகி யோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக, தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகங்களில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும். காலிப்  பணியிடங்களை வேலை வாய்ப்பு அலு வலகங்கள் மூலம் நிரந்தர பணியாளர் களாக தேர்வு செய்ய வேண்டும். புதிய  பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண் டும். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ஓய்வு கால பண பலன்களை ஓய்வு பெறும் நாளன்றே வழங்க வேண்டும், போக்குவரத்து கழகங்களில் அவுட் சோர்சிங் மற்றும் தனியார்மயத்தை  புகுத்தக்கூடாது உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலா ளர் கே.ஆறுமுக நயினார் நிறைவுறை யாற்றினார்.  முடிவில், சேலம் கோட்ட பொருளா ளர் எம்.சேகர் நன்றி கூறினார். இதில் சேலம் கோட்ட பொதுச்செயலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, தருமபுரி மாவட்ட  தலைவர் சண்முகம், விரைவு போக்கு வரத்து சங்க மாநில துனைத்தலைவர் முருகேசன் மற்றும் சேலம், தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் திராளானோர் பங் கேற்றனர்.