districts

img

சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிர்ப்பு: கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம்

நாமக்கல், செப்.3- நாமக்கல்லில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல்லை அடுத்துள்ள வலையபட்டியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வளையப்பட்டியில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிப்காட் எதிர்ப்பு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ராம்குமார் தலைமையில், சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.