districts

img

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு ஏர்கலப்பையுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 26–  காவிரியின் குறுக்கே மேகதா துவில் கர்நாடக அணை கட்டுவ தற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை யில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஏர்கலப்பையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ் என்எல் தலைமையகம் முன்பு ஏர் கலப்பைகளை கையில் ஏந்திய படி கர்நாடக அரசுக்கு எதிராக வும், ஒன்றிய அரசை கண்டித்தும் விவசாயிகள் இந்த ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மேகதாது வில் அணைகட்டும் கர்நாடக அரசை ஒன்றிய அரசு கண்டிக்க வேண்டும். அந்த இடத்தில் இருந்து  கட்டுமான பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

இரு மாநிலத்தினரி டையே மோதல் ஏற்படும் நிலையை கர்நாடக அரசு ஏற் படுத்துகிறது. ஒன்றிய அரசு இதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக, இந்த ஆர்ப்பாட் டத்திற்கு விவசாயிகள் சங்கத் தின் சு.பழனிசாமி தலைமை தாங்கி னார். இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம் மாவட்டச் செயலா ளர் வி.எஸ்.சுந்தரம், துணை செய லாளர் சி.சிவசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;