districts

img

ஆழியார் அணையில் இருந்து எலவக்கரை குளத்திற்க்கு தண்ணீர் திறப்பு

பொள்ளாச்சி, மே 18-

தமிழக அரசின் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையிலிருந்து எலவக்கரை குளத்திற்கு தண்ணீர்  திறக்கப்பட்டது. தமிழக அரசு திங்களன்று  ஆழியார் அணையில் இருந்து எலவக்கரை குளத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி அரசு ஆணை வெளியிட்டது. இதனையடுத்து, ஆழியார் அணையில் இருந்து 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட எலவக்கரை குளத் திற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து வைத்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கள் கூறுகையில், பொள்ளாச்சி  அடுத்த சமத்தூர், கரியாஞ் செட்டிபாளையம், கம்மாலபட்டி என குடிநீர் தேவைக்கும் விவ சாய நிலங்கள் 250 ஏக்கர்  பயன்பாட்டிற்க்கும், எலவக்கரை குளத்திற்க்கு வருடம் இரண்டு முறையும் விநாடிக்கு 61 கனஅடி தண்ணீர் 11 நாட்கள் திறத்துவிடப்பட்டுள்ளதாக அதி காரிகள் தெரிவித்தனர்.

;