districts

img

நாமக்கல்லில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

நாமக்கல், ஜூலை 30- பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நாமக் கல்லில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆட்சியர் ச.உமா திறந்து வைத்தார். நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட மோகனூர் சாலையில் புதிதாக மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 700 படுக்கை வசதி, அறுவை சிகிச்சை சிறப்பு வசதிகள், உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாமக்கல் - மோகனூர் சாலையில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனை செயல் படாமல் இருந்தது. நாமக்கல்லில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அரசு தலைமை மருத்துவமனை இருப் பதால், அவசர தேவைக்கு வரும் நோயாளிகள் மற்றும் வெளி யூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருவ தால், பழைய மருத்துவமனையை மீண்டும் மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் பல்வேறு போராட்டங்கள், அரசு அதிகாரி களை சந்தித்து மனு அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கை களை மேற்கொண்டு வந்தனர். மேலும், மாவட்டத்தின் பல் வேறு பகுதியில் இருந்தும் சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர் என பலரும் நாமக்கல் - மோகனூர் சாலை யில் உள்ள அரசு மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதில் மருத்துவ சிகிச்சைகள் பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று நாமக்கல் அரசு பழைய மருத்துவமனை பகுதியில் புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உட்கட்டமைப்பு வசதி கள் செய்யப்பட்டு திங்களன்று திறக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் ச.உமா, நாமக்கல் சட்டமன்ற உறுப்பி னர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஆட்சியர் பேசுகையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் பழைய அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக நகர ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பிற்கான தொடர் சிகிச்சை, ஆய்வக பரிசோதனை இருதய நோய்களுக்கான பரி சோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படும். தொடர்ந்து அடுத்தடுத்து கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும், என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொது மக்களின் தொடர் கோரிக்கைகளை அடுத்து தற்போது நகர் ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் நாமக்கல் அரசு பழைய மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அவசர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இயங் கும் வகையில், பழைய அரசு மருத்துவமனை கட்டடங் களை பயன்படுத்தி, பொதுமக்கள் முழுமையான மருத்துவ சிகிச்சைகளை பெறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் பிரதான கோரிக்கையாகும்.