districts

img

பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் உற்சாகம்

கோவை, பிப்.1-  கொரோனா  பாதுகாப்பு வழிமுறைகளுடன் செவ்வா யன்று பள்ளிகள் துவங்கிய நிலையில், மாணவ, மாண விகள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த  டிசம்பர் மாதம்  மூடப்பட்ட பள்ளிகள் தற்போது தொற் றின் தாக்கம் குறைந்ததால் 40 நாட்களுக்கு பின்னர் தமிழ கம் முழுவதும் செவ்வாயன்று திறக்கப்பட்டது. 100 சத வீத மாணவர்கள் வருகையுடன் பள்ளிகள் செயல்பட  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 2040 பள்ளிகளில் 57,4727 மாணவ, மாணவிகள் படிக் கின்றனர்.  இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் உற்சாகத்தோடு பள்ளிக்கு சென்ற னர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிக்கு வந்த மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப் பட்டு, கிருமிநாசினி மூலம் கைகள் சுத்தப்படுத்தப்பட்டு மாண வர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கபட்டனர். 15 முதல் 18 வயது டைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக வும், ஆன்லைன் மூலம் படிப்பதை விட பள்ளிகளில் நேரடி யாக வந்து படிப்பதே தங்களுக்கு பிடித்திருப்பதாகவும் மாணவிகள் தெரிவித்தனர். கட்டாயம் முகக்கவசம் அணிந்து  இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாகவும் மாண வர்கள் தெரிவித்தனர்.