districts

பாசனத்திற்கு காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

ஈரோடு, ஜூன் 16- முதல் போக பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து, காலிங் கராயன் வாய்க்காலில் விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் முதல் போக பாசனத் திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி, வெள்ளியன்று காலை பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க் காலில் பாசனத்திற்காக 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து 120 நாட்களுக்கு அதாவது  4 மாதத்திற்கு முதல் போக பாச னத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட் டுள்ளது. இதன் மூலம் ஈரோடு, பவானி, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 15 ஆயிரத்து 743  ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். நாட்கள் செல்ல செல்ல கூடுத லாக தண்ணீர் திறக்கப்படும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். அணைக்கு நீர்வரத்தை காட்டிலும், பாசனத்திற்காக அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்க ளாக பரவலாக மழை பெய்து வருவ தால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மொத்தம்  அணையில் இருந்து 1,105 கன அடி தண் ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.