சேலம், ஏப்.29- உலக புத்தகத் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புத்தக அறிமுக நிகழ்வு, கலத்துரையா டல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்ஒருபகுதியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கொங்கணாபுரம் கிளையும், ரோட்டரி கிளப்பும் இணைந்து உலக புத்தகத் தினக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தி ருந்தன. ஆதித்யா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடை பெற்ற இந்நிகழ்விற்கு அறிவியல் இயக்கத்தின் கிளைத் துணைத்தலைவர் ரவிசங்கர் தலைமை வகித்தார். கிளைப் பொருளாளர் யுவராணி வரவேற்றார். மாவட்டத் தலைவர் செங் கோட்டுவேல் புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து சிறப்புரை யாற்றினார். கொங்கணாபுரம் ரோட்டரி கிளப் தலைவர் பழனி சாமி, செயலாளர் ரத்தினசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அறிவியல் இயக்கத்தின் கிளைச் செயலாளர் உமாமகேஸ் இரா.நடராசன் எழுதிய “மலாலா - கரும்பலகை யுத்தம்” என்ற புத்தகத்தை அறிமுகம் செய்தார். பிறகு கலந்துரையாடல் நடைபெற்றது. முடிவில், இணைச்செயலாளர் சசிகலா நன்றி கூறினார்.