districts

img

“கோ பேக் மோடி - கெட் அவுட் மோடி”

மக்களவை தேர்தலை ஒட்டி, அனல்  பறக்கும் பிரச்சாரம் மாநிலம் முழு வதும் நடைபெற்று வருகிறது. தொகுதி யைச் சார்ந்த வேட்பாளர்கள் மக்களிடம் நேரில் சென்று, பல்வேறு வாக்குறுதிகளை கூறி பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். அது ஒரு புறம் இருக்க, ஆங் காங்கே கட்சித் தொண்டர்கள் நூதன முறையிலும் வாக்கு சேகரித்து வருகின்ற னர். அந்த வகையில், கோவை தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு திமுக வினர் நூதன முறையில் வாக்குகளை சேகரித்தனர். கோவை, பந்தையசாலை (ரேஸ் கோர்ஸ்) பகுதியில் கோவை மாநகர் மாவட்டப் பொறியாளர் அணி அமைப்பா ளர் பாபு தலைமையில் கூடிய திமுகவினர் “கோ பேக் மோடி - கெட் அவுட் மோடி”  என்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளு டன், நடைபயிற்சி மேற்கொண்டவர்களி டம் நூதன முறையில் பிரச்சாரம் மேற் கொண்டனர். அப்போது, எதற்காக கெட் அவுட் மோடி என கூறுகிறோம் என விளக்கி னர். கடந்த ஆண்டுகளில் மோடி தலைமை யிலான பாஜக அரசு மக்களுக்கு எதுவும் செய்ய வில்லை என்பதையும், எதற்காக  உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்  என்பதையும் எடுத்துக்கூறி துண்டு பிரசு ரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு தலைமையில் நடைபெற்ற நூதன பிரச்சா ரத்தில், விவசாய அணி அமைப்பாளர் அக்ரி பாலு, அயலக அணி தலைவர் ராஜ் குமார், விவசாயபொறியாளர் அணி தலை வர் கண்ணதாசன், வைரமணி, ஆண்டனி, ஞானவேல், பாலசந்தர், செந்தில்குமார், கிருபாகரன், சுப்பிரமணியன், ரங்கநாதன், அமீன், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.