districts

img

அனுமதி இல்லாமல் இயங்கும் கல்குவாரி அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்தவர்கள் ஓட்டம்

நாமக்கல், பிப்.20- நாமக்கல் அருகே அனுமதி இல்லாமல் இயங்கி வந்த கல்குவாரியில் ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளை கண்ட தும், அங்கிருந்தவர்கள் வாகனங்களை விட்டு தப்பியோடி னர். நாமக்கல் மாவட்டம், கொண்டம்நாயக்கன்பட்டியில் உரிய அனுமதி இல்லாமல் கல்குவாரி செயல்படுவதாக நாமக்கல் வருவாய் கோட்டாச்சியர் பார்த்திபனுக்கு தகவல்  கிடைத்தது. அதன்பேரில் வியாழனன்று அதிகாலை வரு வாய்த்துறையினர், நாமக்கல், சேந்தமங்கலம் போலீசார் சம் பவ இடத்தில் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது அங்கு பணிபுரிந்து வந்த கல் உடைக்கும் தொழிலாளர்கள், வாகன  ஓட்டுநர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். இதனை யடுத்து உரிய அனுமதி இல்லாமல் கல்குவாரி செயல் பட்டு வந்ததையடுத்து, கல்குவாரியில் இருந்த பாறை களை உடைக்கும் கிட்டாச்சி (Hitachi), கம்பரசர் டிராக்டர் கள், டிப்பர் லாரி என 21 வாகனங்களை வருவாய்த்துறையி னர், போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து யார்  அனுமதி இல்லாமல் கல்குவாரியை நடத்தியது? எவ்வளவு பாறைகள் உடைக்கப்பட்டுள்ளது? அரசுக்கு எவ்வளவு  வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது? என வருவாய்த்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.