நாமக்கல் பிப்ரவரி 19 நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் தாலுகாவிற்குட்பட்ட ஊராட்சியில் உள்ள கிராமங்கில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளை யம் தாலுகா சௌதாபுரம் கிராமத்தில், குமாரபாளையம் நகராட்சி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் சேரும் குப்பை கழிவுகள், கோழி கழிவுகள் ஆகிய வற்றை கொட்டுவதற்கு வருவாய்த் துறை சார்பில் நிலம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் செயல்படும் சாயப்பட்டறை கள் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வ தற்கு சௌவுதாபுரம் கிராமத்தில், சுத்தி கரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கே பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கிராம குடியிருப்பு பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரி டம் அப்பகுதி மக்கள் மனு அளித்த னர். இதில், சௌதாபுரம் கிராமத்தில் குப்பை கழிவுகள் கொட்டுவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும், மேலும் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும், விவசாய நிலங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் இத்தகைய திட்டங்கள் கொண்டு வந்தால் விவசா யிகளுக்கும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். சௌதாபுரம் கிராமத்தில் சுமார் 1200 குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். குப்பைக் கழிவுகளை கொட்ட கூடிய அந்த இடத்திற்கு அருகில் பட்டி யலின உழைப்பாளி மக்கள் வசிக்கக் கூடிய பகுதி உள்ளது, மாணவர்கள், பள்ளி குழந்தைகள் அந்த வழியாகத் தான் பள்ளிக்குச் செல்கின்றனர். இப்ப டிப்பட்ட சூழலில் மற்ற ஊராட்சி பகு திகளின் குப்பைக் கழிவுகளை எங்கள் ஊராட்சி பகுதியில் கொட்டுவதன் மூலம் ஊராட்சியின் அனைத்து பகு திகளும் மாசடைந்து விடும். நிலத் தடி நீரும் மாசடைந்து விடும் குடிநீ ரும் நச்சுத்தன்மை அடைந்து விடும். குப்பைகளை எரிப்பதால், நச்சுப்புகை துர்நாற்றத்தின் மூலம் பொதுமக்க ளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும். ஏற்கனவே எங்கள் கிராமத்தில் மக்கிரி பாளையம் குடியிருப்பு பகுதியில் தெரு நாய்கள் சுமார் 20 ஆடுகளுக்கு மேல் கடித்துக் கொன்று விட்டது. தற் போது குப்பை கழிவுகளை கொட்டி விட்டால் நாய்களின் தொல்லைகள் அதிக அளவில் பெருகி பொது மக்க ளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்ப டைந்து விடும் என அதில் தெரிவித்துள் ளனர்.