திருப்பூர், நவ. 12 – தமிழகத்தில் சத்துணவுத் திட்டத் தில் 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலை சிற்றுண் டித் திட்டத்தை சத்துணவுத் திட்டத் துடன் இணைக்க வேண்டும் உள் ளிட்ட அடிப்படைக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிர தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பாக செவ்வா யன்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந் தனர். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சட்டப்படி ஓய்வூதியம், பணியிட மாறுதல், ஓய்வுபெற்றோ ருக்கு உரிய பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்டத் தலை வர் ஏ.ஜெயந்தி தலைமை ஏற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் ஏ.ராணி போராட்டத்தைத் தொடக்கி் வைத்தார். கோரிக்கை களை விளக்கி மாவட்டச் செய லாளர் டி.மாசிலாமணி பேசினார். இப்போராட்டத்தை வாழ்த்தி அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.ராமன் உரை யாற்றினார். இப்போராட்டத்தில் சங்கத் துணைத் தலைவர்கள் எம். விஜயலட்சுமி, தெய்வானை, சகுந் தலா, அபிராமி, மாவட்ட இணைச் செயலாளர்கள் சாந்தாமணி, சௌ பரணியா, எலிசபெத், ராஜாமணி, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. வசந்தாமணி உள்பட மாவட்டம் முழு வதும் இருந்து திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மா.பாலசுப்பி ரமணியன் உண்ணாவிரதப் போராட் டத்தை முடித்து வைத்துப் பேசி னார். மாவட்டப் பொருளாளர் பி. தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.