திருப்பூர், செப்.14- ஊட்டச்சத்து சத்து மாதத்தை முன்னிட்டு திருப்பூர் சிக் கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சார்பில் சனியன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் காய்கறிகள், கீரைகள், மாலை அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் கள். இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, செல்வபாலன், நவீன்குமார், ஜெயலட்சுமி ஆகியோர் தலை மையில் மாணவ, மாணவிகள் காய்கறிகள் கீரைகள் கொண்ட மாலைகள் அணிந்து வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் கொடுத்து, பேரணியாக சென்று துரித உணவை தவிர்க்க வேண்டும், ஆரோக்கியமான உணவை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.