districts

img

சத்துணவு ஊழியர் சங்கப் பயிலரங்கம்

கோவை, ஜூலை 6- சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட  அளவி லான பயிலரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில்  மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் முன்னணி ஊழியர்க ளுக்கு மாவட்ட அளவில் பயிலரங்கம் கோவை மாவட் டம், தாமஸ் கிளப்பில் சனியன்று நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் கே.என்.ராமசாமி தலைமை யில் நடைபெற்ற நிகழ்விற்கு, மாவட்டச் செயலாளர் ஏ. லதா வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட் டத் துணைத் தலைவர் எஸ்.எம்.வேலுமணி துவக்கி வைத்தார்.  இதில், பயிலரங்கில் சத்துணவுத்திட்டமும் - ஆட்சி யாளர் நிலைப்பாடும் என்ற தலைப்பில் தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் அ.மலர் விழி மற்றும் தலைமைப் பண்புகள் எனும் தலைப்பில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச்  செயலாளர் எம்.சீனிவாசன், சத்துணவு திட்டத்தை பாது காப்போம் என்ற தலைப்பில் தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் கே.பழனிச் சாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் ஜெ.நிர்மலா வாழ்த்தி பேசினார். இந்நிகழ்வில், 100க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்ட பயிலரங்கில் நிறைவாக மாவட் டப் பொருளாளர் பி.சுதா நன்றி கூறி நிறைவு செய் தார்‌.