districts

img

ஜன. 9 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் விசைத்தறியாளர் கூட்டமைப்பு அறிவிப்பு

திருப்பூர், ஜன. 7 - அரசு அறிவித்துள்ள கூலி உயர்வை வழங்க மறுத்து வரும் ஜவுளி உற்பத்தியாளர்களை உடனடியாக கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி ஜனவரி 9ஆம் தேதி முதல் திட்டமிட்ட படி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என்று  கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கோவை, திருப்பூர் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி யாளர்கள் கூட்டமைப்புக் கூட்டம் மங்கலம் அம்மன் கலை யரங்கில் வியாழக்கிழமை சோமனூர் சங்கத் தலைவர் பழனி சாமி தலைமையிலும், பல்லடம் சங்கத் தலைவர் இரா.வேலு சாமி முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இயங்காது. இந்த தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பி  இருக்கக்கூடிய 10 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்பதால் முதல்வர் உடனடியாகத் தலையிட்டு விசைத் தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு வழங்க ஆவன செய்ய வேண்டும். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆட்டோ லூம்,  நவீன விசைத்தறியாளர்கள், அச்சு பிணைக்கும் துறையினர், பாவு நூல் கொண்டு செல்லும் வேன், ஆட்டோ உரிமையா ளர்கள், சுமை தூக்குவோர் ஆதரவு தர வேண்டும். இந்த வேலைநிறுத்தத்தை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வர  ஜவுளி உற்பத்தியாளர்கள் அரசு அறிவித்துள்ள கூலி  உயர்வை வழங்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்  கொண்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு  தொழிற்சங்கங்கள் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாயிகள் சங்கங்களும் இப்போராட்டத்தை ஆதரிப்ப தாக தெரிவித்துள்ளன.