districts

img

ஆர்டர் இல்லை - விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுத்தி வைப்பு

நாமக்கல், ஜூலை 19- ஆர்டர் இல்லாததால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக குமாரபாளையத்தைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள் தெரி வித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் மற்றும் சுற்றுப்புற ஏராள மான விசைத்தறி கூடங்கள் செயல் பட்டு வருகின்றன. இப்பகுதியில் உற் பத்தி செய்யபடும் ஜவுளி ரகங்க ளுக்கு போதிய ஆர்டர் இல்லாததால் ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள் ளது. இதுகுறித்து விசைத்தறி உரிமை யாளர்கள் கூறுகையில், குமாரபா ளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் விசைத்தறி ஜவுளி உற் பத்தி தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. லுங்கி, கர்சீப், துண்டு, வேட்டி உள்ளிட்ட பல ரகங் கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆடி மாத சமயத்தில் எந்தவொரு சுப நிகழ்வும் நடைபெறாது என்பதால், வியாபாரம் இல்லாத நிலை ஏற்படும். வட மாநிலங்களிலும் இதே நிலை என் பதால், இங்கு உற்பத்தி செய்யப் படும் ஜவுளி ரகங்களுக்கு ஆர்டர் இல்லாத நிலை ஏற்படும். தற்போது அந்த நிலைதான் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி செய்த ரகங்களுக்கு சில மாதங்களாக, நூல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் போதிய விலை கிடைக்காமல் இருந்து வந் தது. தற்போது ஆர்டரும் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் ஆடித் திருவிழா முடிந்த நிலையில், ஒரு வாரம் ஜவுளி உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்து, விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஜூலை 18 முதல் ஒரு வார காலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் ஜவுளி வியாபாரத்திற்கு ஆர்டர் கிடைத்திடும் வகையில் ஒன் றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட் களின் விலையை கட்டுப்படுத்தவும் வேண்டும். இந்த விடுமுறையால் விசைத்தறி தொழிலை நம்பி நேரடி யாகவும், மறைமுகமாகவும் பணி யாற்றி வரும் ஏராளமான தொழிலா ளர்களுக்கு வேலை இழப்பு அபா யம் ஏற்பட்டுள்ளது, என்றனர்.