districts

img

ஓட்டுக்காக பிரதமர் தமிழ்நாடு வருகிறார் - ஆ.ராசா சாடல்

ஆ.ராசா சாடல் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட் பட்ட ஈரோடு மாவட்டம், சத்தி, புளியம் பட்டி, பவானிசாகர் பகுதிக்கான திமுக முக வர்கள், செயல்வீரர்கள் கூட்டம் சத்தியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஆ.ராசா கலந்து கொண்டு பேசுகையில், வருகின்ற நாடா ளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜக ஆட் சியை தோற்கடிக்க அனைவரும் கட்டாயம் பாடுபட வேண்டும். சென்னை, தூத்துக் குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழையில், நம் மக்கள் அனைவரும் சொல்லனெ துயரப்பட்டனர். அப்போது வராத மோடி, தேர்தலில் ஓட்டு கேட்க மட்டும் தமிழகம் வந்து வந்து போகிறார். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ஒன்றிய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், நிர்மலா  சீதாராமன் ஆகியோர் வந்தனர். ஆனால், பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ஒன்றிய  அரசு சார்பில் சல்லிபைசா கூட கொடுக்க வில்லை. தற்போது, ஓட்டுக்காக ஆங் காங்கே மேடை ஏறும் மோடி, வெறும் பொய் பிரச்சாரத்தை மட்டும் அள்ளி வீசுகிறார்.  நாடாளுமன்றத்தில் நடைபெறும் கேள்வி நேரத்தில் கூட கலந்து கொள் ளாத ஒரே பிரதமர் மோடி தான். இதுவரை எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, எந்த கேள்விக்கும் நாடாளுமன்றத்தில் மோடி பதில் கூறியது இல்லை. இப்படிப் பட்ட சர்வாதிகார தன்மை கொண்ட  நபரை, ஆட்சியை எதிர்வரும் தேர்தலில் முறியடிக்க களம் காண்போம். நாடாளு மன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக நிச்சயம் வெற்றி பெறும். அதற் காக அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலில்  பணியாற்ற வேண்டும். நமது வெற்றியை  முதலமைச்சருக்கு காணிக்கையாக சமர்ப் பிக்க வேண்டும். தமிழகத்தில் இதற்கு முந் தைய ஆட்சி செய்த அதிமுகவினர் தமிழக அரசின் கஜானாவை காலி செய்து விட்டு  சென்றனர். அதன் பிறகு ஆட்சி பொறுப் பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3  மாதத்தில் பல்வேறு தொழில் முதலீட்டு களை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இதன் மூலம் ரூ. 8 லட்சம் கோடி முதலீடு, தொழில் துறையில் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தொடர்ந்து மாநில அர சுக்கு தரவேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்தி வருகிறது, என்றார்.