உதகை, பிப்.15- நீலகிரியில் எந்த அரசு பள்ளி யையும் மூடும் திட்டம் இல்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் 237 தொடக்கப் பள்ளிகள், 81 நடுநிலைப் பள்ளிகள், 54 உயர்நிலைப் பள்ளி கள், 40 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 412 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்வி ஆண்டில் 27,768 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடி விட்டு அருகில் உள்ள பள்ளிகளு டன் இணைக்க கல்வித்துறை திட்ட மிட்டதாகவும், 15 க்கும் குறை வான மாணவர்களை படிக்கும் அரசு பள்ளிகளை மூடிவிட்டு, அங்கு இருக்கும் மாணவர்களை மற்ற அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக கடந்த 7 ஆம் தேதி யன்று உதகையில் உள்ள ஒரு தனி யார் பள்ளியில் நடந்த ஆலோ சனைக் கூட்டத்தில், நீலகிரி மாவட் டத்தில் 15 மாணவர்களுக்கு குறை வாக பள்ளியில் படிக்கும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்த ரவு பிறப்பிக்கப்பட்டது. சுமார் 80 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர். இது விபரீத முடிவு என்றும், இவ் வாறு மாற்றும்போது அனைத்து மாணவர்களும் அருகில் உள்ள பள்ளிக்கு செல்வதில் சிக்கல் ஏற் பட்டு படிப்பு பாதிக்கப்படும் என்றும் கூறி இதற்கு பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அரசு பள்ளிகளில் வட மாநில குழந்தைகள் மற்றும் பழங்குடி யின குழந்தைகள் அதிகம் படிப்ப தால் அவர்கள் படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று அச்சம் தெரிவித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்த குமார் (பொறுப்பு) சனியன்று வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில், நீல கிரி மாவட்டத்தில் 287 அரசு நடு நிலை மற்றும் தொடக்கப் பள்ளி கள் உள்ளன. கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான சமீ பத்திய முயற்சியாக, 7 பிப்ரவரி 2025 அன்று, மாவட்டக் கல்வி அதிகாரி மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தப் பட்டது. இந்த கூட்டத்தில் பள்ளிக ளின் வருகைப்பதிவை மேம்படுத்து தல் மற்றும் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு அர சுப் பள்ளியையும் மூடும் திட்டமோ, உத்தரவுகளோ இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.