districts

img

நெருங்கும் கோடைகாலம்: வனப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம்

பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்க புதிய திட்டம்

கோவை, போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட் பட்டது வெள்ளியங்கிரி மலை. மாசி சிவராத்திரியின் போது  ஆயிரக்கணக்கானோர் வெள்ளியங்கிரி மலைக்கு செல் கின்றனர். இவர்கள் தின்பண்டங்கள், குடிநீர் பாட்டில் கள், பிளாஸ்டிக் கவர்களை எடுத்துச் செல்கின்றனர். அவற்றை மலைப் பாதையில் வீசி செல்கின்றனர். இத னால் சுற்றுச்சூழல் பாதிப்படைகின்றன. இதனால் பிளாஸ் டிக் கழிவுகளை டன் கணக்கில் தேங்குகின்றன. மேலும் இவற்றை அப்புறப்படுத்து வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனை தடுப்பதற்கு மலையேறு பவர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு வைப்புத்தொகை பெற்றுக்கொண்டு, கீழே வந்து பாட் டிலை திரும்ப அளித்தபிறகு அந்த தொகையை அளிக்கும் திட்டத்தை வனத்துறையினர் அறிவித்துள்ளனர். செயல் படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், சிவ ராத்திரியை முன்னிட்டு 20ம் தேதி வரை மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக வனப்பணியா ளர்கள், உள்ளூர் சூழல் காவலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து மலையேறுபவர்களை ஒழுங்குபடுத்தவும், பிளாஸ்டிக் பைகள், எளிதில் தீப் பற்றும் பொருட்களுக்காக பரிசோதனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மலை ஏறுவதற்கு முன் அவர்கள் எடுத்து வரும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தலா ரூ.20 வைப்புத் தொகையாக பெற்றுக்கொள்ளப்படும். பணம் பெற்றதற்கு அடையாளமாக பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட் டப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை, போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட் பட்டது வெள்ளியங்கிரி மலை. மாசி சிவராத்திரியின் போது  ஆயிரக்கணக்கானோர் வெள்ளியங்கிரி மலைக்கு செல் கின்றனர். இவர்கள் தின்பண்டங்கள், குடிநீர் பாட்டில் கள், பிளாஸ்டிக் கவர்களை எடுத்துச் செல்கின்றனர். அவற்றை மலைப் பாதையில் வீசி செல்கின்றனர். இத னால் சுற்றுச்சூழல் பாதிப்படைகின்றன. இதனால் பிளாஸ் டிக் கழிவுகளை டன் கணக்கில் தேங்குகின்றன. மேலும் இவற்றை அப்புறப்படுத்து வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனை தடுப்பதற்கு மலையேறு பவர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு வைப்புத்தொகை பெற்றுக்கொண்டு, கீழே வந்து பாட் டிலை திரும்ப அளித்தபிறகு அந்த தொகையை அளிக்கும் திட்டத்தை வனத்துறையினர் அறிவித்துள்ளனர். செயல் படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், சிவ ராத்திரியை முன்னிட்டு 20ம் தேதி வரை மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக வனப்பணியா ளர்கள், உள்ளூர் சூழல் காவலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து மலையேறுபவர்களை ஒழுங்குபடுத்தவும், பிளாஸ்டிக் பைகள், எளிதில் தீப் பற்றும் பொருட்களுக்காக பரிசோதனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மலை ஏறுவதற்கு முன் அவர்கள் எடுத்து வரும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தலா ரூ.20 வைப்புத் தொகையாக பெற்றுக்கொள்ளப்படும். பணம் பெற்றதற்கு அடையாளமாக பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட் டப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

முதுமலையில் தீத்தடுப்பு கோடுகள்

முதுமலை புலிகள் காப்பகம், கூட லூர் வனப்பகுதி, உதகை வனப்பகுதி என ஆயிரக்கணகான சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அடர்ந்த காடுகள் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட பனிப்பொழிவால் புல் வெளிகள், காடு கள் கருக தொடங்கியுள்ளது. இதனால் வனப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்கி யுள்ளது. இதனால் வனப்பகுதியில் எளிதில் தீ பரவுகிறது. வன விலங்கு கள் மற்றும் விலை உயர்ந்த மரங்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளது. அதற் கேற்ப கூடலூர், சிங்காரா வனப்பகுதி யில் காட்டுத்தீ பரவியது. இதை கருத் தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக வனத்துறையினர் சாலை யோரங்களின் இருபுறமும் 6 மீட்டர்  அகலத்திற்கு தீத்தடுப்பு கோடுகள்  அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து புலிகள் காப்ப கத்துக்குட்பட்ட சிங்காரா, மசினகுடி, தெப்பக்காடு, சீகூர் உள்ளிட்ட வன சர கங்களின் ரேஞ்சர்கள் தீத்தடுப்பு கோடு கள் அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. ஒவ்வொரு சரகத்திற்கும் 100 கி.மீ  தூரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக் கப்படுவதாகவும், இப்பணி சில வாரங்க ளில் நிறைவு பெறும் என வனத்துறை யினர் தெரிவித்துள்ளனர்.