திருப்பூர், ஆக.4- அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் 28 புதிய திட்டப்பணிகளைத் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மு.பெ.சாமிநா தன் வியாழனன்று துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், வெள்ளக் கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் 28 புதிய திட் டப்பணிகளைத் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் துவக்கி வைத்தார். முன்னதாக, வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றி யம், மேலப்பாளையம் ஊராட்சி, இரா சாத்தாவலசு ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி மற்றும் மேலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளயில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்பம் பதிவு மையத்தினை அமைச்சர் மு.பெ சாமி நாதன் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தா.கிருஸ்துராஜ், திருப்பூர் மாநக ராட்சி 4 ஆம் மண்டலத்தலைவர் இல. பத்மநாபன், வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராகவேநத்தி ரன், மகேஷ், உதவி பொறியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.