அவிநாசி, மே 29- அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சனி யன்று இந்திய மாணவர் சங்க புதிய கிளை அமைக் கப்பட்டது. அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்திய மாணவர் சங்க மாநாடு நடைபெற்றது. இம்மா நாட்டில், பள்ளியில் போதிய குடிநீர் வசதி, பள்ளிக்கு குறித்த நேரத்தில் பேருந்து வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து மாணவர் சங்க தலைவராக குரு, செயலாளராக சூர்யா, துணைத்தலைவராக சரண், துணைச் செயலாளராக ஆகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர். இதில், மாவட்ட துணைச்செயலாளர் மணிகண்டன், சஞ்சய், மாவட்டக்குழு உறுப்பினர் சித்திக், அம்சவரதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.