ஈரோடு, டிச.5- தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஈரோடு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தேசிய அறிவியல் கழகத்துடன் இணைந்து நடத்திய மாவட்ட அளவி லான 30 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு என்சிஎஸ்சி ஒருங்கிணைப்பாளர் கெ.சியாமளா நாச்சியார் வரவேற்றார். மாநாட்டின் இந்த ஆண்டு மையக் கருப்பொருள் ‘ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக் கான சுற்றுச்சூழல் அமைப்பைப் புரிந்து கொள்வது ஆகும். இதன் துணைக் கருப்பொருள்களாக சுற் றுச்சூழல் அமைப்பை அறிந்து கொள் ளுங்கள், ஆரோக்கியம், ஊட்டச் சத்து மற்றும் நல்வாழ்வை வளர்ப் பது, சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கி யத்திற்கான சமூக மற்றும் கலாச்சார நடைமுறைகள், சுற்றுச்சூழல் அடிப் படையில் தற்சார்புக்கான அணுகு முறை, சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக் கியத்திற்கான தொழில்நுட்ப கண்டு பிடிப்பு ஆகிய தலைப்பின் கீழ் பள்ளி குழந்தைகள் ஆய்வறிக்கைகளும், கண்டுபிடிப்புகளும் சமர்ப்பித்தனர்.
இதில், 40க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 104 ஆய்வு கட்டுரைகள் இடம் பெற்றன. இதிலிருந்து 11 ஆய்வு கட்டுரைகள் வருகின்ற டிசம்பர் 10, 11 நாட்களில் தூத்துக்குடியில் நடை பெற உள்ள மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட் டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. பேராசிரியர் முனைவர் பெருமாள், வேளாண்மை இணை இயக்குநர் மணிமொழி, துணை இயக்குநர் மகா லிங்கம் படைப்புகளை ஆகியோர் படைப்புகளை தேர்வு செய்தனர். நிறைவாக குழந்தை விஞ்ஞானி களுக்கு நடைபெற்ற பாராட்டு விழா விற்கு கல்லூரி முதல்வர், முனைவர் இரா.சங்கர சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் முனை வர் வெங்கடாசலம் குழந்தைகளை பாராட்டி உரையாற்றினார். மேனாள் மாநிலத் தலைவர் முனைவர் என்.மணி நோக்கங்களை விளக்கி உரை யாற்றினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் குழந்தை விஞ்ஞானிகளுக்கு சான்று கள் வழங்கினார். தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் சார்பாக தேர்ந்தெடுக் கப்பட்ட வானவில் மன்ற தூதுவர் களின் சிறப்பான ஒருங்கிணைப்பு பணியினை பாராட்டி சான்றிதழ் மற் றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட் டன. இறுதியாக செ.கார்த்திகேயன் நன்றி கூறினார்.