districts

img

எம்எல்ஏ அலுவலகத்தில் இறக்கப்படாத தேசியக்கொடி

பொதுமக்கள் அதிருப்தி பென்னாகரம், பிப்.2- பென்னாகரம் சட்டமன்ற அலு வலகத்தில் குடியரசு தினத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி, ஆறு நாட்களாகியும் இறக்கப்படாத தால் மரபு மீறப்பட்டுள்ளதாக குற் றச்சாட்டு எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னா கரம் சட்டப்பேரவை தொகுதியா னது 33 கிராம ஊராட்சி, இரண்டு பேரூராட்சிகளை உள்ளடக்கி யது. பென்னாகரம் சட்டப்பேர வைத் தொகுதி உறுப்பினர் அலு வலகம் சார்பதிவாளர் அலுவல கம் அருகாமையில் அமைந்துள் ளது. கடந்த ஜன.26 குடியரசு தின விழாவில், பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத் தில் உள்ள கொடிக்கம்பத்தில் எம்எல்ஏ ஜி.கே.மணி கொடி யேற்றி வைத்தார். அதன் பின்னர் சட்டப்பேரவை அலுவலகம் தொடர்ந்து பூட்டியே காணப்பட் டது.  இந்நிலையில், குடியரசு தினம் முடிவுற்று 6 நாட்களாகியும், எம்எல்ஏ அலுவலகத்தில் ஏற் றப்பட்ட தேசியக்கொடி இறக்கப் படாமல் அப்படியே கொடிக்கம் பத்தில் உள்ளது. குடியரசு தின  விழாவில் அரசு அலுவலகங் களில் காலை 7 மணிக்கு கொடி கள் ஏற்றப்பட்டு, மாலை 5 மணிக் குள் கொடி இறக்கப்பட வேண்டும் என்பது மரபு. ஆனால், சட்டப் பேரவைத் தொகுதி அலுவலகத் தில் இன்றுவரை தேசியக்கொடி  இறக்கப்படாதது வேதனை அளிப் பதாக அப்பகுதியினர் தெரிவிக் கின்றனர்.