நாமக்கல், மார்ச் 8- எலச்சிபாளையம் கிராமத்திற்குட்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கும்பலின் முக்கிய நபர் குஜராத்தில் கைது செய்யப்பட்டார். போதை மாத்திரைகள் அதிகம் குஜராத்தில் கிடைப்பதாக கைது செய் யப்பட்ட சௌத்திரி வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள கூலி தொழிலாளர்களிடையே போதை மாத்திரை பழக்கம் உள்ளதாக வந்த தகவலின்பேரில், காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் போதை மாத்திரைகளை நீரில் கரைத்து நரம்புகளில் செலுத்தி போதையை உருவாக்கு வது தெரியவந்தது. இதையடுத்து திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் இமயவரம்மன் தலைமையி லான போலீசார் கடந்த 10 தினங்களாக தீவிர விசாரணை சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது வெப்படை அருகே உள்ள சாமுண்டூர் என்னும் பகுதியிலுள்ள மயானத் தில் கட்டிட கூலித் தொழிலாளர்கள், தாங்கள் பயன்படுத் திய ஊசி, மருந்துகளை வீசி செல்லும் பொழுது பிடித்து, தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் வடமாநிலத்தைச் சார்ந்த இரண்டு இளைஞர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை கண்டுபிடிக்க எலச்சிபாளையம் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் குஜராத் மாநிலம், அகமதாபாத் நகருக்கு விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த சவுத்ரி என்கிற தினேஷ்குமாரை போலீசார் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த னர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை கொண்ட பொழுது, குஜராத் மாநிலத்தில் வலி நிவாரண மாத்திரை கள் சகஜமாக கிடைப்பதால் அங்கிருந்து அவற்றை கொரி யர் மூலம் தமிழகத்துக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித் தார். இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வெப்படை காவல் நிலையத்திற்கு வந்து குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொண்டார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனிப்படை போலீ சார் உதவி மூலமே இந்த குற்றத்தை கண்டுபிடிக்க முடிந்தது. தமிழகத்தில் 99 சதவிகித மருந்துக் கடைகளில் கிடைக்காத வலி நிவாரண மாத்திரை, கேன்சர் நோயாளிகளுக்கு அதிக மாக வழங்கப்படக்கூடியது. அதுவும் மருத்துவர் கண்காணிப் பிலேயே வழங்கப்பட்டு நோயாளிகளும் கண்காணிக்கப் பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாத்திரை வகை குஜ ராத் மாநிலத்தில் எளிதில் கிடைப்பதால் அவற்றை கொரியர் மூலம் பள்ளிபாளையம், வெப்படை பகுதிகளுக்கு அனுப்பி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவா ளியான சவுத்ரி என்கிற தினேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் உட்பட நான்கு பேர் கைது செய் யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளனர், என்றார்.