districts

img

ஜன.26 முதல் பிப்.2 வரை நாமக்கல் புத்தகத் திருவிழா

நாமக்கல், ஜன.20- நாமக்கல் புத்தகத் திருவிழா ஜன.26 ஆம் தேதி முதல் பிப்.2  ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன் னேற்பாடுப் பணிகள் குறித்து ஆட்சியர் ச.உமா நேரில் ஆய்வு  செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா ஜன.26 ஆம்  தேதி தொடங்கி பிப்.2 ஆம் தேதி வரை நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) நடைபெறவுள்ளது. புத்த கத் திருவிழாவில் 80-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப் படவுள்ளன. மேலும், புத்தக திருவிழாவில் பள்ளி, கல்லூரி  மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப்போட் டிகள், கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், பேச்சாளர் கள் பங்கேற்கும் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளது. இதற் கான முன்னேற்பாடுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா சனியன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.  இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன், நாமக்கல்  வருவாய் கோட்டாட்சியர் மா.க.சரவணன், முதன்மை கல்வி  அலுவலர் ப.மகேஸ்வரி, நாமக்கல் நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.