அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு, இந்த நாடாளுமன்ற தேர்தல் முன்னோடியாக இருக்க வேண்டும். அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசினார். சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணி, சேலம் நாடாளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத் திற்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். பின்னர், அவர் சேலம் நாடாளு மன்ற திமுக வேட்பாளர் செல்வகணபதி மற்றும் கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் தே.மலையரசன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் திமுக 21 இடங்களில் போட்டியிடுகிறது. முதல் முதலில் நாம் தான் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி இருக்கிறோம். அதிக மான வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற வேண்டும். வீரபாண்டியார் காலத்தை மீண்டும் கொண்டு வருவோம். அடுத்த தேர்தலுக்கு இந்தத் தேர்தல் முன்னோடி யாக இருக்க வேண்டும். டி.எம்.செல்வ கணபதி இடைத்தேர்தல்களில் கடுமை யாக பணியாற்றியவர். கலைஞரிடம் பாராட்டு பெற்றவர். சேலம் தொகுதிக்கு என்ன தேவை என்பது அவருக்கு நன்கு தெரியும். அவரை வெற்றி பெற வைப்போம் கழகத் தலைவர் கருத்தை வலுப்படுத்து வோம் என்றார். இந்நிகழ்ச்சியில், சிபிஎம் சேலம் மாவட்டச் செயலாளர் மேவை சண்முக ராஜா, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோ கன், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் பாஸ்கர், கிழக்கு மாவட்டத் தலைவர் அர்த் தநாரி, மதிமுக மாவட்டச் செயலாளர் சங்கேஸ்வரன் உள்ளிட்ட இந்தியா கூட் டணி கட்சிகளைச் சார்ந்த மாவட்டச் செய லாளர்கள் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.