districts

img

தொலைக்காட்சி நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்

திருப்பூர், ஜன. 25 - திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட் டார நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தி யாளராக வேலை செய்து வரும் நேச  பிரபு மீது மர்ம கும்பல் கொலை வெறி  தாக்குதல் நடத்தியது. அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகி றார். செய்தியாளர் மீது கூலிப்படையை ஏவி கொலை வெறி தாக்குதல் நடத்திய வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க  வேண்டும், இச்சம்பவத்தில் அலட்சிய மாக செயல்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்த னர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வர் நேச பிரபு (வயது 28). இவர் கடந்த  சில ஆண்டுகளாக பல்லடம் மற்றும்  சூலூர் வட்டார செய்தியாளராக வேலை  செய்து வருகிறார். இந்நிலையில் புதன்  அன்று அடையாளம் தெரியாத மர்மகும் பல் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நேச  பிரபு குறித்து விசாரித்து வந்தனர்.  மாலை இவர் வீடு திரும்பிய நிலையில்  மர்மகும்பல் அவரை கண்காணித்து வந் ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேச  பிரபு காவல்துறை அவசர தொடர்பு எண் ணுக்கும், காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தி ருக்கிறார்.

எனினும் காவல்துறையினர் நேரில் நிலையத்திற்கு வரும்படி தெரி வித்ததாக கூறப்படுகிறது. இந்நிலை யில் சுமார் 10.15 மணி அளவில் நேச  பிரபு காரில் கிருஷ்ணாபுரத்திலிருந்து பொள்ளாச்சி சாலை பிரிவு வரை வந்தி ருக்கிறார். அங்குள்ள பெட்ரோல் பங்க்  பகுதியில் வைத்து மர்மகும்பலை சேர்ந் தவர்கள் அவரை சுற்றிவளைத்து அரி வாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சர மாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அந்த கும்பல் தப்பி சென்றது. தகவல் அறிந்து ஆம்புலன்ஸ் வாக னம் மூலம் நேச பிரபுவை பல்லடம் அரசு  மருத்துவமனைக்கு கொண்டுவந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர்  கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்  சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து காவல்து றையினர் தனிப்படை அமைத்து குற் றவாளிகளை பிடிக்க முயற்சி மேற் கொண்டு வருகின்றனர். பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் தனியார் தொலைக்காட்சி நிருபர்  தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியா ளர்கள் வியாழக்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவா ளிகளை உடனடியாக கைது செய்ய  வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட  காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி னர். இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சாமிநாதனை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கை குறித்து வலியுறுத் தினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று காவல் கண்கா ணிப்பாளர் சாமிநாதன் கூறினார். இந்த  சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்து றையினர் தெரிவித்துள்ளனர்.  அதேபோல, இச்சம்பவம் தொடர் பாக உடுமலை பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பிலும் கண்டனம் தெரிவிக் கப்பட்டுள்ளது.