நாமக்கல், மார்ச் 7- சொத்து வரி நிலுவை வைத்த பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு திருச்செங்கோடு நகராட்சி ஆணை யர் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு நகராட்சியில் வரி வசூல் ரூ.10 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி உள்ள தால், நகராட்சி ஆணையாளர் சேகர் தலைமையில் முறையான வரி கட் டாத அரசு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி யாக, ஒன்றிய அரசு நிறுவனமான சந்தைபேட்டை பகுதியில் அமைந் துள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.10 லட் சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரி பாக்கி நிலுவை வைத்துள் ளது. நகராட்சி சார்பில் பலமுறை வலியுறுத்தியும் வரி கட்டாததால், நக ராட்சி ஆணையர் சேகர் தலைமை யில் பிஎஸ்என்எல் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும், தனி யார் கட்டிடங்களும் தொழில் வரி கட்டாததால் பூட்டி சீல் வைக்கப்பட் டது. ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவ னம் நகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நகராட்சி ஆணை யர் சேகர் கூறுகையில், திருச்செங் கோடு நகராட்சியில் சுமார் ரூ.10 கோடி ரூபாய்க்கு மேல் வரி பாக்கி உள்ளது. இதனால் நகராட்சி ஊழியர்களுக்கு பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், நகராட்சி சம்பந்தப்பட்ட பணி களிலும் தொய்வு ஏற்படுவதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பணிகள் தொடர்ந்து நடைபெறும். பலமுறை வலியுறுத்தியும் வரி செலுத்தாதவர்களின் பெயர்கள் திருச்செங்கோட்டில் முக்கிய பகுதி களில் பிளக்ஸ் பேனர் ஆக வைக்கப் படும் என ஆணையாளர் சேகர் எச்ச ரிக்கை விடுத்தார்.