districts

img

சாலையை மறித்து ஆக்கிரமிப்பு சுவர் செப்.15-க்குள் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு

திருப்பூர், செப்.5 - திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்ட லத்துக்கு உட்பட்ட 24 ஆவது வார்டு சாமுண்டி புரம், அன்னை கார்டனில் மாநகராட்சி சாலை யில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு சுவரை செப்டம்பர் 15க்குள் அகற்றுவது என்று மாநக ராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிடக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக் கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந் தனர். அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட  மாநகராட்சி அதிகாரிகளும், மாநகராட்சி  இடம் ஆக்கிரமிப்பு செய்து கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பு களை உடனடியாக அகற்ற வேண்டும் என நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். மாநகராட்சி நிர்வா கம், சாலையை ஆக்கிரமித்துக் சுவர் கட்டி யுள்ள தனியார் மீது சட்டப்படியான நடவ டிக்கை எடுப்பதுடன், அந்தச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், தந்தை பெரியார் திராவிடர்  கழகமும் வலியுறுத்தினர்.  இந்நிலையில் வியாழனன்று முதலாம் மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில், காவல்துறை உதவி ஆணையர் அனில்குமார், வேலம்பா ளையம் காவல் ஆய்வாளர் தாமோதரன், மாந கராட்சி நகரமைப்பு அலுவலர் ஆகியோர்  முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் த.பெ.தி.க. மாநகரத் தலைவர் சண்.முத் துக்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பா ளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், நகரக் குழு உறுப்பினர் அ.ஆறுமுகம் ஆகி யோர் கலந்து கொண்டனர். அதன்படி, அபி ராமி நகரிலிருந்து அன்னை கார்டன் வழியாக,  சாமிநாதபுரம் முக்கிய சாலைக்கு எளிதாக வந்துவிட முடிகிற அந்தச் சாலையை மறித்து  கட்டப்பட்டுள்ள சுவர் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு களை வரும் 2024 செப்டம்பர் 15 ஆம் தேதிக் குள் அகற்றுவதாக மாநகராட்சி தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.  இதேபோல், மாநகரப் பகுதியில் உள்ள பல குடியிருப்புகளில், மாநகராட்சிக்குச் சொந்தமான சாலைகளில் இரும்பு கேட் அமைத்தல்; ஆளுயரச் சுவர் எழுப்புதல் போன்ற ஆக்கிரமிப்புகள் உள்ளனவா என்று  ஆய்வு செய்து, அங்குள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, மாநகரச் சாலைகளை முழு மையாக மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப் பட்டது.