ஈரோடு, அக். 14- எம்ஆர்பி செவிலியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் திங்களன்று எம்ஆர்பி செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். தேர்தல் வாக்குறுதியின்படி எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரை யும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். புதித தாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக்கல் லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்து வமனைகளில் காலியாக இருக்கும் 1500 செவி லியர் பணியிடங்களை எம்ஆர்பி தொகுப்பூ திய செவிலியர்களைக் கொண்டு உடனடி யாக நிரப்ப வேண்டும். கொரோனா காலத் தில் பணிபுரிந்த, பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். நோயாளிகளின் எண் ணிக்கைக்கேற்ப நிரந்தர பணியிடங்கள் உருவாக்க வேண்டும். பாலியல் குற்றங் களை விசாரிக்க அனைத்து மருத்துவம னைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியு றுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநில தலை வர் ஜி.சசிகலா தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் ச.விஜயமனோ கரன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மு.சீனிவாசன் நிறைவுரை யாற்றினார். மாவட்டத் தலைவர் ஜெ.ஜெய சுகி, மாவட்டச் செயலாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.