districts

img

மலை ரயில் சேவை ரத்து

மேட்டுப்பாளையம், நவ.4- மழை காரணமாக மலை ரயில் தண்டவாளத்தில் பாறைகள் சரிந்த தால் மேட்டுப்பாளையம் உதகை  இடையேயான மலை ரயில் சேவை  ஞாயிறன்று ரத்து செய்யப்பட்டது.  கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் - உதகை இடையே  யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை  ரயில் தினசரி இயக்கப்பட்டு வருகி றது. இந்நிலையில், மேட்டுப்பாளை யத்தில் சனியன்று இரவு பெய்த மழை  காரணமாக கல்லார் - அடர்லி இடையே தண்டவாள பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மண் ணோடு பாறைகளும் உருண்டு விழுந்து மலை ரயில் செல்லும்  தண்டவாள பாதை சேதமானது.  இதன் காரணமாக மேட்டுப்பாளை யத்தில் இருந்து உதகை  வரை காலை  7 மணிக்கு புறப்பட்டு சென்ற மலை  ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு சுற்றுலாப்  பயணிகளுடன் திருப்பி அனுப்பப்பட் டது. இந்நிலையில், மலை ரயில்  சேவை திங்களன்றும் ரத்து செய்யப் பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வா கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.