மேட்டுப்பாளையம், நவ.4- மழை காரணமாக மலை ரயில் தண்டவாளத்தில் பாறைகள் சரிந்த தால் மேட்டுப்பாளையம் உதகை இடையேயான மலை ரயில் சேவை ஞாயிறன்று ரத்து செய்யப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் - உதகை இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் தினசரி இயக்கப்பட்டு வருகி றது. இந்நிலையில், மேட்டுப்பாளை யத்தில் சனியன்று இரவு பெய்த மழை காரணமாக கல்லார் - அடர்லி இடையே தண்டவாள பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மண் ணோடு பாறைகளும் உருண்டு விழுந்து மலை ரயில் செல்லும் தண்டவாள பாதை சேதமானது. இதன் காரணமாக மேட்டுப்பாளை யத்தில் இருந்து உதகை வரை காலை 7 மணிக்கு புறப்பட்டு சென்ற மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு சுற்றுலாப் பயணிகளுடன் திருப்பி அனுப்பப்பட் டது. இந்நிலையில், மலை ரயில் சேவை திங்களன்றும் ரத்து செய்யப் பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வா கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.