மேட்டுப்பாளையம், ஜூலை 18- நவீன வசதிகளுடன் பெட்டிகள் உதகை சிறப்பு மலை ரயிலில் இணைக்கப்பட்டு இயக்கப்படுவ தால், பயணிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு மலை ரயில் இயக்கப் பட்டு வருகிறது. இந்த மலை ரயிலா னது, பல்வேறு மலைகள் மற்றும் குகைகளை தாண்டியும், அருவிகள், நீர்வீழ்ச்சிகள், பசுமையான பள்ளத் தாக்குகளை கடந்து செல்கிறது. அடர் வனத்திற்கு நடுவே செல்வதால் பல இயற்கை காட்சிகள், வனவிலங்கு களை பார்க்கலாம் என்பதால், இந்த ரயிலில் ஒருமுறையாவது பயணிக்க வேண்டும் என்பதே நீலகிரிக்கு சுற் றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணமாக உள்ளது. இப்படிப்பட்ட இந்த மலை ரயிலுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி யன்று யுனெஸ்கோ அந்தஸ்து வழங் கப்பட்டது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்று 18 ஆண்டுகள் நிறைவ டைந்து, 19 ஆவது ஆண்டில் நீலகிரி மலை ரயில் அடிவைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக மேட் டுப்பாளையம் - உதகை இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயிலில், அதிநவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகளை இணைக்க முடிவு செய் யப்பட்டது. இதற்காக பெரம்பூர் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில், அதிநவீன வசதிகளுடன் பெட்டி உருவாக்கப் பட்டது. இந்த பெட்டி சில நாட்க ளுக்கு முன்பு மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டு, சிறப்பு மலை ரயிலுடன் இணைக்கப்பட்டது. இந்த அதிநவீன வசதிகளுடன் கூடிய மலை ரயில் இயக்கம் யுனெஸ்கோ அந் தஸ்து பெற்ற தினத்தில் தனது பய ணத்தை தொடங்கியது. முன்பு இயங் கிய மலை ரயிலில், மற்ற ரயில்களை போல் ஜன்னல் இருக்கும். அதனை திறந்து நாம் இயற்கை காட்சிகளை பார்க்க வேண்டிய சூழல் இருந்தது. மேலும், கால்களை மடக்கியபடியே நீண்ட தூரம் பயணிக்கும் நிலையும் காணப்பட்டது.
ஆனால், தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள பெட் டியில். மலை ரயில் அடர்ந்த காடுக ளுக்கு நடுவே பயணிக்கும் போது, வனத்தின் இயற்கை காட்சிகளை யும், வன விலங்குகள், அருவிகள், நீர் வீழ்ச்சிகளை ஜன்னலை திறக்காமல், நாம் இருந்த இடத்தில் இருந்தே கண்டுகளிக்க முடியும். இதற்காக அலுமினியத்தால் ஆன கண்ணாடி களால், பரந்து விரிந்த கதவுகளுடன் கூடிய மிகப்பெரிய ஜன்னல்கள் உரு வாக்கப்பட்டுள்ளது. இதுதவிர பயணிகள் கால் நீட்டி அமருவதற்கு ஏற்ற வகையில் மேம் படுத்தப்பட்ட இருக்கை வசதியும் ஏற் படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. குஷன் வகையிலான இருக்கைகள் அமைக் கப்பட்டு, பயணிகள் நன்றாக தங்கள் கால்களை நீட்டி கொண்டே பயணம் செய்யலாம். சாதாரணமாக ரயில் சென்று கொண்டிருக்கும் போது குலுங் குவது நமக்கு தெரியும். ஆனால், இந்த பெட்டியில் அமைக்கப்பட் டுள்ள ரோலர் தாங்கு உருளைகளால் நமக்கு ரயில் குலுங்குவது உள்பட எந்தவித அசைவுகளும் தெரியாமல் செல்லும். மேலும், பெட்டி முழுவ தும் எல்இடி விளக்குகள், செல்போன் சார்ஜ் போடுவதற்கான வசதிகளும் உள்ளன. உதகை - மேட்டுப்பாளை யம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு மலை ரயிலில் இணைக்கப்பட் டுள்ள இந்த புதிய பெட்டிகள் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வர வேற்பை பெற்றுள்ளது.