கோவை, ஆக. 24- குரங்கு அம்மை நோய் கோவை யில் யாருக்கும் உறுதி செய்யப்பட வில்லை. இருப்பினும் சிகிச்சைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுக ளும் தயார் நிலையில் உள்ளதாக கோவை அரசு மருத்துவமனை முதல் வர் நிர்மலா தெரிவித்தார். கோவை அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா சனியன்று செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், கடந்த ஆக.14 ஆம் தேதியன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீற முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அதேபோல பயிற்சி மருத்துவர்கள் கழிப்பிடம், அடிப் படை வசதிகள் கோரிக்கை வைத்த னர். அதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மருத்துவ மனை வளாகத்தில் 250 சிசிடிவி கேம ராக்கள் உள்ளது. ஒரு சில சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை அதை சரி செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனையில் விளக்கு இல்லை என்றார்கள், அது முழுமை யாக சரிசெய்யபட்டது. கழிப்பிடம் வசதி இல்லை என்று தவறான செய் திகள் பரப்பி வருகின்றனர். அது உண்மை இல்லை. அதே போல மருத் துவமனையில் பாதுகாப்பு உறுதி செய்ய காவல் ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அரசு மருத்துவமனையில் பழைய கட்டி டம் என்பதால் அங்கு ஒரு சில குறைபாடுகள் உள்ளது. உடனடி யாக குறைபாடுகளை சரி செய்து வரு கிறோம். மருத்துவமனை வளாகத் தில் சாலை, பாதாள சாக்கடை இணைப்பு பணிகள் நடைபெறவுள் ளது. இந்த பணிகள் நடைபெற்றால் சீக்கிரம் தீர்வு கிடைக்கும். வாகனங்கள் நிறுத்துவதால் மருத்துவமனை வளாகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதை தவிர்க்கும் விதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. மருத்துவ மனையில் நோயாளிகளை பார்வை யிட 4 - 6 மணி வரைக்கும் தான் பார்வையாளர்கள் நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது. நோயாளிகள் உடன் 2 பேர் தான் உள்ளே இருக்க வேண்டும். குடும்ப நபர்கள் அனைவரும் தங்கு வது தவறு. அதை தவிர்க்க வலியு றுத்தி வருகிறோம். தற்போது இந்த சம்பவத்திற்கு பின் மருத்துவமனை வளாகத்தில் காவல்துறை ரோந்து பணி அதிகரிக் கப்பட்டுள்ளது. இதுவரை கோவை யில் குரங்கு அம்மை நோய் யாருக்கும் உறுதி செய்யப்பட வில்லை. இருப்பினும் சிகிச்சைக்கு தேவையான வசதிகள் தயார் நிலை யில் உள்ளது என்றார்.