districts

திருச்சபைகளை மூடக்கோரி தொடர் மிரட்டல் சிறுபான்மை நலக்கட்சி கண்டனம்

பொள்ளாச்சி, ஜன.1-  திருச்சபைகளை மூடக்கோரி, இந்துத்துவா மதவாத சக்தியினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவ தற்கு தமிழ்நாடு சிறுபான்மை நலக் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் சாம் ஏசுதாஸ் கூறுகையில், வட மாநிலங்களை போலவே தமிழகத்திலும் இந்துத்துவா சக்திகள் தலைதூக்க  ஆரம்பித்துள்ளனர். இவர்கள் மாற்று மதத்தவர்களின் நம் பிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் நடந்து வருவது வேத னையளிக்கிறது. இதுகுறித்து, காவல் துறையினரிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதாக தெரிய வில்லை. சமீபகாலங்களில், தமிழகத்தில் மட்டும் தேவால யங்கள் மூடப்பட்டு வருவது தொடர்கதையாகியுள்ளது. குறிப்பாக கோவையில் 10 தேவாலயங்கள் மூடப்பட்டுள் ளது. ஆகவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை  எடுக்க வில்லை என்றால் கண்டன இயக்கங்கள் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

;