கோவை, நவ.13- சிறுபான்மை மக்கள் சுதந்திரமாக வழிபட சிலர் தடை ஏற்படுத்துவது உள் ளிட்டு 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் கோவையில் செய்தியாளர்க ளிடம் தெரிவித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத் தபட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை யின் சார்பில் தமிழ்நாடு மாநில சிறு பான்மையினர் ஆணையம் கலந்துரை யாடல் கூட்டம் புதனன்று நடைபெற் றது. இதில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த சிறு பான்மை அமைப்பினர் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத் திற்கு, தமிழ்நாடு மாநில சிறுபான்மை யினர் நல ஆணையத் தலைவர் சொ. ஜோ அருண் தலைமை வகித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந் தித்து பேசிய ஜோ அருண், தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி பணி செய்து வருகிறோம். சிறுபான்மை மக்க ளுக்கு வகுக்கப்பட்ட திட்டம், சலுகை, உரிமை போன்றவை சேர்ந்துள்ளதா? சேர்ந்தால் எப்படி மாற்றம் ஏற்பட்டுள் ளது. என்ற ஆய்வு செய்து உள் ளோம். கல்லறை தோட்டம், பள்ளி வாசல், வழிப்பாட்டு தலம் பாதுகாப்பு போன்ற கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், கபர்ஸ்தான், கல்லறை தோட் டம் உள்ளிட்ட பிரதான கோரிக்கை யாக உள்ளது. நீண்ட நாள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றி கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்து உள் ளார். கிருஸ்துவ ஆலயங்களில் நடக் கும் மோசடி குறித்து முறையான புகார் அளித்தால் விசாரணை நடத்தி நடவ டிக்கை எடுக்கப்படும். பள்ளிவாசல், கிருஸ்துவ ஆலயங்களில் வழிபாடு தடை இருப்பதால், அதற்கு பாதுகாப்பு கேட்டுள்ளனர். மேலும், 250 புகார்கள் மற்றும் கோரிக்கைகள் வந்துள்ளது என்றார்.