கோபி அருகே உள்ள சிறுவலூரில் நீர்மோர் பந்தலை அமைச்சர் முத்துச்சாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோரை வழங்கினார். இந்நிகழ்வில், வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், கோபி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் முருகன், விவசாய அணி மாநில இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி, நெசவாளர் அணி மாநில செயலாளர் சிந்துரவிசந்திரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.