districts

img

நிலம் கையகப்படுத்தாததுதான் பணிகள் தாமதமாவதற்கு காரணம்!

ஈரோடு, ஆக.4- அத்திக்கடவு – அவிநாசி திட் டப்பணிகள் தாமதமாவதற்கு கார ணம், நிலம் கையகப்படுத்தாதது தான் என,  அமைச்சர் சு.முத்துசாமி பேட்டியளித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில், அத்திக்கடவு - அவிநாசி திட்ட முன்னேற்ற நிலை  தொடர்பான ஆய்வுக்கூட்டம், ஞாயிறன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச் சர் சு.முத்துசாமி தலைமையில் நடை பெற்றது. இதன்பின் அவர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், அத் திக்கடவு - அவிநாசி திட்டத்தில் மொத்தமுள்ள 6 நீரேற்று நிலையங் களில் 1 முதல் 3 நீரேற்று நிலை யங்கள் உள்ள பகுதிகளில், நிலம் கையகப்படுத்துவதில் சிறு தொய்வு ஏற்பட்டதன் காரணமாக பணிகள் காலதாமதமானது. நீரேற்று நிலை யம் 1 முதல் 3 இடையில் உள்ள பட்டா நிலங்களின் வழியாக பிர தான குழாய் பதிக்கும் பணிகளை  தொடங்கும் முன், நில இழப்பீடு மற் றும் பயிர் இழப்பீடு தொகை வழங் கிய பின் பணிகளை மேற்கொள்ளு மாறு கேட்டுக்கொண்டனர். இத னால் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அப்பகுதியில் குழாய் பதிக்கும் பணிகளை தொடங்க இயலவில்லை. தொடர்ந்து நில உரிமையாளர்களிடம் அரசின் சார் பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு குழாய் பதிக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு, கடந்தாண்டு ஜன வரி மாதத்தில் பணிகள் முடிக்கப் பட்டது. அதன்பின் கடந்தாண்டு பிப்.20 ஆம் தேதியன்று சோதனை ஓட் டப்பணிகள் தொடங்கப்பட்டது. இத னிடையே, போதிய உபரிநீர் காலிங் கராயன் அணைக்கட்டில் இல்லாத காரணத்தினால், மீண்டும் கடந் தாண்டு நவம்பரில் தொடங்கப் பட்டு இந்தாண்டின் ஜனவரியில் 1045 குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முதல் உபரிநீர் காலிங் கராயன் அணைக்கட்டில் இல்லாத காரணத்தினால் இத்திட்டம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலவில்லை. இதனிடையே, தமிழ்நாடு முதல்வர் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று பவானிசாகரிலி ருந்து தண்ணீர் திறந்துவிட வேண் டுமென அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, தண்ணீர் திறந்துவிட்ட பிறகு கிடைக்கும் அதிகப்படியான உபரிநீர் பெற்றவுடன், இத்திட்டத் தினை பொதுமக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.