districts

img

மண்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்

உதகை, பிப்.10- சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 6 நபர்களின் குடும் பத்தினருக்கு, நீலகிரி நாடாளு மன்ற உறுப்பினர் ரூ.1 லட்சம் ரொக்க மும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் ரூ.50,000 ரொக்கமும், வழங்கி, ஆறுதல் தெரி வித்தனர். நீலகிரி மாவட்டம், உதகை தமிழ கம் அரசு விருந்தினர் மாளிகையில் நடந்த கூட்டத்தில், அரசு அதிகாரி கள், பொறியாளர்கள், பொதுமக்க ளிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.  பின்னர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவி லக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச் சர் சு.முத்துசாமி செய்தியாளர்களி டம் கூறுகையில், கட்டிட அனுமதி பெறுவதில் உள்ள நடைமுறை சிக் கல்கள் குறித்து பயனாளிகள் அரசி டம் கோரிக்கையாக வைத்துள்ளனர். பெரும்பாலான உரிமங்களுக்கு வனத்துறையின் அனுமதி பெறுவது அவசியமானதாக உள்ளது. அதை  கருத்தில் கொண்டும், பயனாளிக ளுக்கு குறிப்பிட்ட காலத்தில் கட்டிட  அனுமதி வழங்க ஏற்பட்டுள்ள நடை முறை சிக்கல்கள் குறித்து, துறை ரீதியாக விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரின் கவ னத்துக்கு கொண்டு சென்றதால், சனி யன்று சம்மந்தப்பட்ட துறை அலுவ லர்களுடன் கட்டிட அனுமதி வழங்கு வது தொடர்பான நடைமுறைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது. மேலும், எவ்வித பாதிப்பும்  இன்றி முறையாக சட்டத்துக் குட்பட்டு, விதிமுறைகளை பின்பற்றி  கட்டிடம் கட்ட வேண்டும் என்பதற்கா கதான் சில பாதுகாப்பு நடைமுறை கள் உள்ளது. ஆகவே, பொறியா ளர்கள் சட்ட விதிமுறைகளை முழு மையாக பின்பற்றி கட்டடப் பணி களை மேற்கொள்ள வேண்டும். என்று கூறினார். இதைத் தொடர்ந்து,  லவ்டேல் காந்திநகர் பகுதியில் சுவர்  இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி  உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தி னருக்கு, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ரூபாய் .1 லட்சம் ரொக்க மும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் ரூபாய் .50,000 ரொக்கமும், வழங்கி, ஆறு தல் தெரிவித்தனர். மேலும், விபத் தில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை உதகை அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வைத்துறை அமைச்சர், நீலகிரி  நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர்  நேரில் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து, மருத்து வர்களிடம் கேட்டறிந்து ரூபாய்.5,000 ரொக்கமும், நாடாளுமன்ற உறுப் பினர் ரூபாய்.25,000 ரொக்கமும் வழங்கினார்கள். இக்கூட்டத்தில், சுற்றுலாத் துறை அமைச்சர் ராமசந்தி ரன், நகர் ஊரமைப்பு இயக்குநர்  கணேசன், மாவட்ட ஆட்சியர் மு. அருணா, சட்டபேரவை உறுப்பினர்  ஆர்.கணேஷ், கூடுதல் ஆட்சியர்  (வளர்ச்சி) கௌசிக், முன்னாள் அரசு  கொறடா பா.மு.முபாரக், நகராட்சி  நிர்வாக மண்டல இயக்குநர் (திருப் பூர்) இளங்கோவன் மற்றும் பல்வேறு  அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.