districts

img

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிடுக

சேலம், அக். 20 பசும்பால் லிட்டருக்கு ரூ.10வீதம் உயர்த்தி ரூ.42யும், எருமைப்பாலுக்கு ரூ.51ம் கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும். பால் நிலுவை பண பாக்கி, ஊக்கத் தொகை, போனஸ் உள்ளிட்டவற்றை தீபாவளிக்கு முன்பாக  வழங்க வேண்டும் என வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில்  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  சங்கத்தின், மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் பெரியண்ணன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  தருமபுரி  இதேபோல், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம்  சார்பில் தருமபுரி அருகே செம்மாண்டகுப்பம் கூட்டுறவு பால்  உற்பத்தியாளர் சங்க அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடை பெற்றது.

 ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் என்.கந்த சாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்ட செயலாளர் சோ.அருச்சுணன், பால் உற்பத்தியாளர்  சங்க  மாவட்ட தலைவர் கே.அன்பு  ஆகியோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றினர். முன்னதாக, பால் உற்பத்தி யாளர்கள் கறவை மாடுகள் மற்றும் பால் கேன்களுடன்  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அரூர் வட்டம் எச்.ஈச்சம்பாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.தீர்த்தகிரி, அரூர் கூட்டுறவு கரும்பு ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் சண்முகம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  ஈரோடு சத்தியமங்கலம், மேட்டுக்கடையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சா.க.அருள்மொழி தலைமை வகித் தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டத்  தலைவர் க.இரா.திருத்தணிகாசலம், தமிழ்நாடு விவசாயி கள் சங்க சத்தி தாலுகா செயலாளர் பி.வாசுதேவன் கலந்து  கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்ன தாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறவை மாடுகளுடன் பங்கேற்றனர்.