சேலம், ஜூன் 4- மேட்டூர் அணை நீர்மட் டம் சனியன்று மேலும் சரிந்து 115.10 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி களில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக் கல்லில் வியாழனன்று 5 ஆயிரம் கன அடி யாக இருந்த நீர்வரத்து வெள்ளியன்று மாலை 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால், மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேட்டூர் அணைக்கு வெள்ளியன்று வினாடிக்கு 3 ஆயிரத்து 599 கன அடியாக இருந்த நீர்வ ரத்து சனியன்று மீண்டும் சரிந்து 3 ஆயிரத்து 420 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 8 ஆயிரம் கன அடி தண் ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.வெள்ளியன்று 115.38 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் சனி யன்று மேலும் சரிந்து 115.10 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரித் தால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப் புள்ளது.