districts

img

மேகதாது அணையை கட்ட அனுமதிக்கவே முடியாது!

சேலம், ஆக.3- மேகதாது அணை கட்டவிடுவ தில்லை என்ற முடிவில் தமிழ்நாடு அரசு தீர்க்கமாக உள்ளதென, நீர்வ ளத்துறை அமைச்சர் துரைமுருகன்  தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள மேட் டூர் அணையில் மாநில நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சனி யன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து  அணையின் 16 கண் மதகு, நீர்மின் நிலையம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மேட்டூர் அணை யிலிருந்து வெள்ள உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருவதையொட்டி, மேற்கொள்ளப்பட்டுள்ள பாது காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்து ஆய்வு மேற் கொண்டு, அணையின் நீர்வரத்து, உபரிநீர் வெளியேற்றம், அணை யின் நீர் இருப்பு விவரம் உள்ளிட்ட வற்றை நீர்வளத்துறை அதிகாரிக ளிடம் கேட்டறிந்தார். இதன்பின் அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க மேட்டூர் அணையிலிருந்து ஜூலை  28 ஆம் தேதியன்று பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் கீழ் ஜூலை 31 ஆம் தேதியன்று தண்ணீர் திறக்கப்பட்டு, ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. மேட்டூர் உபரிநீர் திட்டத்தில், மேச்சேரி பகு திகளில் உள்ள ஏரிகளை நிரப்ப  பொதுமக்களிடமிருந்து வரப் பெற்ற கோரிக்கைகள் குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக் கப்படும். அத்திக்கடவு - அவிநாசி  திட்டம் ஓரிரு மாதங்களில் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்படும்.  மேகதாது அணை கட்டவிடுவ தில்லை என்ற முடிவில் தமிழ்நாடு  அரசு தீர்க்கமாக உள்ளது. மேலும்,  தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லா மல் இத்திட்டதை செயல்படுத்த முடியாது. தருமபுரி மாவட்டத்தில் காவிரி நீரினை குடிநீருக்கும், பாச னத்திற்கும் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகி றது, என்றார். இந்த ஆய்வில், சேலம் மாவட்ட  ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, நாடா ளுமன்ற உறுப்பினர்கள் டி.எம். செல்வகணபதி, ஆ.மணி, சட்ட மன்ற உறுப்பினர்கள் ரா.ராஜேந்தி ரன், எஸ்.சதாசிவம், மாநகராட்சி ஆணையர் ரஞ்ஜீத் சிங், மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமையின் கூடு தல் ஆட்சியர் (வளர்ச்சி) லலித்  ஆதித்ய நீலம், மேட்டூர் சார் ஆட்சி யர் நே.பொன்மணி, நீர்வளத் துறை முதன்மை தலைமை பொறி யாளர் மன்மதன், திருச்சி மண் டல நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் தயாளகுமார், மேல்  காவிரி வடிநில வட்ட கண்காணிப் புப் பொறியாளர் ராமலிங்கம் முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங் கம் பெ.சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.