பள்ளிபாளையம், பிப்.14- மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத் துவ முகாம் பள்ளிபாளையம் அரசுப் பள்ளியில் நடை பெற்றது. நாமக்கல், பள்ளிபாளை யம் ஆவரங்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், பிறப்பு முதல் 18 வயது உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்களுக்கான மருத்துவ முகாம் திங்களன்று நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் பரிசோதனை, மனநல மருத்துவம், வாய் பேசாமை, பேச்சு மொழித்திறன் குறைபாடு, முடக்கு வாதம், குழந்தைகள் நல மருத்துவம் உள்ளிட்ட வைகள் குறித்து சிறப்பு மருத்துவர்கள் மூலம் புதிய குழந்தைகளை கண்டறிந்து, அடை யாள அட்டை வழங்குதல் மற்றும் கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ், அறுவை சிகிச்சைக் கான ஏற்பாடுகள் செய்யும் நிகழ்வு நடை பெற்றது. முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மோ. செல்வராஜ், துணைத்தலைவர் ப.பால முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமினை துவக்கி வைத்தனர். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக் குமரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.