districts

img

அவிநாசி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையம் ஏற்படுத்திடுக

அவிநாசி, ஜூன் 5- அவிநாசி அரசு மருத்துவ மனையில் விபத்துகளுக்கு அவசர சிகிச்சை மையம் ஏற்படுத்தித்தர வேண்டும் என ஞாயிறன்று அவிநா சியில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய  மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.   அவிநாசியில் ஞாயிறன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டை மாதர் சங்க மாநிலத் துணை தலைவர் ஜி.சாவித்திரி துவக்கிவைத்து பேசினார். மாநாட்டை வாழ்த்தி வாலிபர் சங் கத்தின் முன்னாள் ஒன்றிய செய லாளர் ஆர்.பழனிச்சாமி பேசினார். இம்மாநாட்டில், வேலாயுதம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, ஆட் டையம்பாளையம் பகுதிக்கு கோவை செல்லும் பிரதான சாலை யில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இருப்பினும் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன, இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள் ளாகின்றனர். எனவே, இப்பிரச்ச னையில் மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு, பேருந்துகள் நிற்க வழிவகை செய்ய வேண்டும். அவிநாசி அரசு மருத்துவமனைக்கு விபத்துகளின் காரணமாக வருகை தரும் நோயா ளிகளுக்கு அவசர சிகிச்சை மையம் ஏற்படுத்த வேண்டும். அவிநாசி பேரூராட்சியை இணை நகராட்சி யாக தரம் உயர்த்த வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இதில், ஒன்றிய தலைவராக ஆர்.சித்ரா, ஒன்றிய செயலாளராக ஆர்.கே.செல்வி, ஒன்றிய பொரு ளாளராக எம்.தங்கமணி, துணைத்  தலைவராக வி.தேவி, துணை செய லாளராக சிவகாமி உட்பட 11 பேர்  கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய் யப்பட்டனர். மாவட்டத் தலைவர் மைதிலி நிறைவுரை ஆற்றினார்.